Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 547 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
547நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 3
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்
போது அலர் காவில், Pothu Alar Kaavil - சிறந்த பூக்கள் அலர்கின்ற சோலையிலே
புது மணம், Pudhu Manam - புதிதான பரிமளமானது
நாற, Naara - வீச
பொறி வண்டின், Pori Vandin - அழகிய வண்டினுடைய
காமரம், Kaamaram - காமரம் என்கிற பண்ணை
கேட்டு, Kettu - கேட்டுக் கொண்டு
உன் காதலியோடு உடன் வாழ் குயிலே, Un Kaadhaliyodu Udan Vaazh Kuyile - உன் பேடையோடு கூட வாழ்கிற குயிலே!
மாதலி, Maadhali - மாதலியானவன்
தேர் முன்பு, Ther Munbu - (இராவணனுடைய) தேரின் முன்னே
கோல் கொள்ள, Kol Kolla - கோலைக் கொண்டு தன் தேரை நடத்த
மாயன் இராவணன் மேல், Maayan Iraavanan Mel - மாயாவியான ராவணன் மேலே
சரம் மாரி, Saram Maari - பாண வர்ஷத்தை
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த, Thaai Thalai Attru Attru Veezha Thodutha - (அவ்விராவணனுடைய ப்ரதானமான தலை (பலகால்) அற்று அற்று விழும்படி ப்ரயோகித்த
தலைவன், thalaivan - எம்பெருமானுடைய
வரவு, Varavu - வரவை
எங்கும், Engum - ஒரு திக்கிலும்
காணேன், Kaanen - காண்கிறேனில்லை (ஆதலால்)
என், En - என்னுடைய அநுபவத்துக்கு யோக்யனாய்
கரு மாணிக்கம், Karu Maanikam - நீல ரத்நம் போன்ற திருமேனியை யுடையனான அவ் வெம்பெருமான்
வர, Vara - இங்கே வரும்படியாக
கூவாய், Koovai - நீ கூவ வேணும்