Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 523 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
523நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 10
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே
வாய் அமுதம், Vaai amudham - அதராம்ருதத்தை
உண்டாய், Undaai - பருகினவனே!
எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று, Engal sitril nee sidhaiyel endru - நாங்கள் இழைக்குஞ் சிற்றிலை நீ அழிக்கா தொழியவேணும் என்று
வீதிவாய், Veethivaai - வீதியிலே
விளையாடும், Vilaiyaadum - விளையாமாநின்ற
ஆயர் சிறுமியர், Aayar sirumiyar - இடைப் பெண்களுடைய
மழலைச் சொல்லை, Mazhalai sollai - இளம் பருவத்துக்குரிய மெல்லிய சொல்லை உட்கொண்டு
வேதம் வாய், Vedham vaai - வேதத்தை உச்சாரிக்கின்ற வாயையுடையவர்களும்
தொழிலார்கள், Thozhilaargal - வைதிகத் தொழில்களைச் செய்பவருமான (பரமை காந்திகள்
வாழ், Vaazh - வாழுமிடமான
வில்லிபுத்தூரிர், Villiputhoorir - ஸ்ரீ வில்லிபத்தூரிருக்கு
மன், Man - தலைவரான
விட்டு சித்தன் தன், Vittu chithan than - பெரியாழ்வாருடைய திருமகளான
கோதை, Kothai - ஆண்டாளுடைய
வாய் வாக்கில், Vaai vaakkil - நின்று அவதரித்த
தமிழ், Thamizh - தமிழ்ப்பாசுரங்களை
வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள்
குறைவு, Kuraivu - இன்றி குறைவில்லாமல்
வைகுந்தம் சேர்வர், Vaigundham servar - பரமபதஞ் சேரப்பெறுவர்.