Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 5 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
5திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --முற்பட அநந்ய பிரயோஜனரை அழைத்தார் கேவலரும் ஐஸ்வர்யார்த்திகளும் பிரயோஜனாந்த பரராய் இருக்கச் செய்தேயும் கேவலருடைய துர்கதியைக் கண்டு முந்துற அழைத்தார் -இப்பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளை-அழைக்கிறார் 5
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
லாயிரத்தாண்டு என்மினே
அண்டக் குலத்துக்கு, Andak Kulathukku - அண்டங்களின் ஸமூஹத்துக்கு
அதிபதி ஆகி, Adhipathi Aagi - நியமிப்பவனாகி
அசுரர், Asurar - அஸுரர்களும்
இராக்கதரை, Iraakkatharai - ராக்ஷஸர்களுமாகிற
இண்டக் குலத்தை, Indak Kulathai - நெருக்கின கூட்டத்தை
எடுத்து, Eduthu - திரட்டி
களைந்த, Kalaindha - ஒழித்த
இருடீகேசன் தனக்கு, Irudeekesan Thaankku - இந்திரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர், Thondak Kulathil - அடிமை செய்பவர்கள் குலத்திலே
உள்ளீர், Ullireer - உள்ளவர்களான
வந்து, Vandhu - எங்கள் கோஷ்டிக்கு வந்து
அடி, Adi - அச்சுதனுடைய திருவடிகளை
தொழுது, Thozhudhu - ஸேவித்து
ஆயிர நாமம் , Ayira Naamam - அவனுடைய ஆயிரம் பெயர்களையும்
சொல்லி, solli - வாயாரச்சொல்லி
பண்டைக் குலத்தை, Pandai Kulathai - புருஷோத்தமனிடம் சென்று மற்றொரு பலனைப் பெற்று அகலுபவர்களாயிருந்த பழைய ஜன்மத்தை
தவிர்ந்து, Thavirndhu - நீக்கி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே, Pallaandu Pallaayiraththaandu Enmine - பலகால் மங்களாசாஸனம் செய்யுங்கள்