Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 470 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
470பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - எம்பெருமான் தனது அந்தரங்க சிங்கார்களான நித்யஸூரியள் அனைவரிடத்தும் அன்பைக் குறைத்து, அவ்வன்பு முழுவதையும் தம்மொருவர் பக்கலில் அமைந்தருளின பரமோபகாரத்தைப் பேசுகின்றார், இப்பாட்டில் “சென்றால் குடையாம்” என்றபடி பலவகைப் பணிவிடைகளையுஞ் செய்யவல்ல திருவனந்தாழ்வானிடத்தும், உவந்து தேறுதைக்குரிய பெரிய திருவடியினிடத்துமே அன்பு குறைந்ததென்றால், மற்றையோரிடத்துக் குறைவுற்றது. கைமுதிக நியாயத்தாற் பெறலாகுமென்க ஐது எனினும், நொய்து எனினும் அற்பமென்றே பொருள்; இங்கு ஒருபொருட் பன்மொழியாய், ‘மிகவும் அற்பமாக’ என்று பொருள்படும். இப்படி ‘வாழச்செய்தாய் எம்பிரான்!’ என்ற ஆழ்வாரை நோக்கி, எம்பெருமான், “ஆழ்வீர்! இன்று வாழ்ந்ததாகக் கூறுகின்ற நீர் நெடுநாளாக இவ்விருள் தருமா ஞாலத்தில் தட்டித்திரிந்து அலமந்து மிகவும் இளைத்தீரே” என்ன; அதற்கு ஆழ்வார், “ஐயனே! உன்னை இன்று நெஞ்சார நினைத்து, பிறகு ‘நெஞ்சுழியும்’ என்றபடி மனஸ் சைதில்யமும் பெற்று, கண்களும் நீர் மல்கப் பெற்று, பிறகு இவ்வாறாக பரிபாகங்கள் பிறக்கைக்கடியாக நீ செய்தருளின நன்றிகளை மநநம் பண்ணிக் கொண்டே ஸகல தாபங்களும் தவிரப் பெற்றேனாகையால், என் சிரமத்தைப்பற்றி உனக்குச் சிந்திக்க வேண்டிய கடமையில்லை” என்கிறார். பின்னடிகளில். அசும்பு – கண்ணீர்; வடசொல் திரிபு சிரமம் – வடசொல் திரிபு. கையும் திருவாழியுமான அழகைக் கண்ட பின்பும் இளைப்பாறக் கேட்கவேணுமோ என்பார் ‘நேமி நெடியவனே!’ என விளிக்கின்றார் 8
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8
நேமி, Nemi - திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே, Nediyaavane - ஸர்வாதிகனே!
எம் பிரான், Em piran - எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும், Anandhan paalum - திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும், Garudan paalum - பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து, Aidhu noithaaga vaithu - (அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே, En manam than ulle - எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி, Vandhu vaigi - வந்து பொருந்தி
வாழச் செய்தாய், Vaazha seidhaai - (என்னை) வாழ்வித்தருளினாய்
என் உள்ளே, En ulle - (இப்படி வாழ்வித்த உன்னை)என் நெஞ்சில்
நினைந்து நின்று, Ninaindhu nindru - அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு, Nekku - (அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக, Kangal agambu ozhuga - கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே, Ninaithu irundhe - (நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன், Siramam theerthen - இளைப்பாறப் பெற்றேன்