Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 465 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
465பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ் “பிறவியென்னுங் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால், இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்” என்ற தம்முடைய விரோதிகள் ஒழிந்தமையையும் அபேக்ஷிதம் தலைக் கட்டிமையையும் அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நீரொருவர் மாத்திரம் பேறு பெற்றால் அது என்னாகும்? உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கும் விரோதி கழிந்தலாலன்றோ? நீர் பேறு பெற்றீராவது” என்ன, அதற்கு ஆழ்வார், “என் நாயகனே! நான் உன்னுடைய பொருளாக வாய்ந்த பின்பு என்னைப் போல் நன்மை பெற்றார் இவ் வுலகில் யாரேனுமுண்டோ? என்னுடைய விரோதிகள் கழிந்ததன்றி என்னோடு ஸம்பந்தம் பெற்றாருடைய விரோதிகள் கழிந்தது மன்றி, இந் நாட்டிலுள்ள ரனைவருடையவும் விரோதிகளுமன்றோ கழிந்தன; இதற்கு மேற் படவும் ஒரு நன்மை யுண்டோ?” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு. எம்மனா – எம் மன்னா; தொகுத்தல்; ‘மன்னன்’ என்ற சொல்லின் ஈறுதிரிந்த விளி. “எம்மனாயென் குலதெய்வமே” என்றும் ஒரு பாடம். அப்போது ‘எம் அனாய்’ எனப் பிரியும். அனாய்-அன்னை என்பதன்விளி; தொகுத்தல் ; எனக்குத் தாய் போலப் பிரியமே நடத்துமவனே! என்றபடி. குலதெய்வம் – வடமொழித் தொடர். “நம்மன்போல வீழ்த்தமுக்கும்” என்று – பாவங்களின் கொடுமையைக் கூறியவாறு. “நாட்டுள பாவமெல்லாம்” என்றும் பாடமுண்டென்பர். (சும்மெனாதே) ‘கப் சிப், வாயைத் திறவாமல் ஓடிப் போய் விட்டான்’ என்பதுபோல ; போவது பிறர்க்குத் தெரியாதபடி போயினவென்க. (தூறுகள் பாய்ந்தன) “வனோ மறிகடலோ மாருதமோத தீயகமோ, நானோ ஒருங்கிற்றுங் கண்டிலமால்- ஆனீன்ற, கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்ததார். தாள் பணிந்தோம், வன்துயரை யாவாமருங்கு” என்றார் நம்மாழ்வார். “இவ் விடத்தில், தூறு என்கிறது ஸம்ஸாரிகளை” என்றருளிச் செய்வாராம் திருக்கோட்டியூர் நம்பி. தூறென்று செடியாய், கிளை விட்டுக் கிடக்கிற ஸம்ஸாரத்தைச் சொல்லக் கடவதிறே. “முற்ற விம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றிற் புக்கு” என்ற திருவாய்மொழி காண்க. 3
எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3
எம் மனா, Em mana - எமக்குத் தலைவனே!;தாய் ; மன்னன்
என் குல தெய்வமே, En kuladeivame - என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே, Ennudaiya naayagane - எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய், Ninnulen ai - உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும், Naatil ulla ella paavangalum - உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்;நாடு சாஸ்திரம் என்றுமாம்
சும்மெனாதே, Summenaathe - மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை, Petra nanmai - பெற்ற நன்மையை
இ உலகினில், I ulaginil - இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார், Aar peruvaar - மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல, Namman pol - பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும், Veezhndhu amukkum - கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு, Kai vittu - ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி, Odi - ஓடிப் போய்
தூறுகள், Thoorugal - புதர்களில்
பாய்ந்தன, Paaindhana - ஒளிந்து கொண்டன