Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 464 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
464பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்பாட்டில், “இனியென் திருக்குறிப்பே” என்று எனக்குச் செய்ய வேண்டுவதெல்லாம் செய்து தலைக் கட்டின பின்பு இனிப்பதறுவானென்? என்று கேட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் எல்லாம் பெற்றீரோ? உம்மை நெடு நாளாகப் பற்றிக் கிடக்கிற கருமங்கள் கிடக்கின்றவே; ப்ராப்திக்கு உறுப்பான பரம பக்தி பிறக்க வில்லையே” என்ன; இவை யித்தனையும் தமக்குப் பிறந்தபடியை அருளிச் செய்கிறார் – நீ பொருளல்லாத வெள்ளைப் பொருளாக்கின பிறகு ஸம்ஸார ஸாகரமானது நிச் சேஷமாக வற்றிப் போனமையால், அடியோர் பெருத்த பாக்கியம் பண்ணினேனாகிறேன்; இந்த ஸம்ஸாரத்துக்கு மூலமான பாப ராசிகளும் தீயினிற் பட்ட தூசு போல இவை யெல்லாம் இங்ஙனொழிந்தமையால் ஞானம் குறைவற்ற வளரப்பெற்றது என்றவாறு. எம்பெருமான் ஆழ்வாரைத் திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போவதாகப் பெரிய திருவடியின் மேலேறிக் கொண்டு வந்து தோன்றினனாதலால் “பறவையேறு பாம்புருடா” என விளிக்கின்றார். ‘பெரும்பதமாகின்றது’ என்பதற்கு முன், எனக்கு என வருவிக்க வேணும்; பெரிய பதவியை யான் பெறா நின்றேன் என்றபடி. இன்றளவும் பிறவிக் கடலில் ஆழங்காற்பட்டுக் கிடந்தமையால் நிஹீந பதவியிலிருந்த நான், இன்று அதனை வென்றமையால் உத்தம பதவியைச் சேர்ந்தேன் என விரிக்க. ஆல் இரண்டும் மகிழ்ச்சிக் குறிப்பிடைச் சொல். தீக்கொளீஇ – தீக்கொண்டு; சொல்லிசையளபெடை ? “போய பிழையும் புகு தருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்” என்ற திருப் பாவை இங்கு நினைக்கத்தக்கது. அறிவை என்ற சொல்லில், ஐ -சாரியை. இவ் விடத்தில் அறிவை யென்று பரம பக்தியைச் சொல்லுகிறதென்பர். பிறவிக் கடலில் ஆழ்ந்திருந்த நான், அதனை வென்று வெளிக் கிளம்பி நின்றால், ஞானமாகிற ஒரு அமுதவாறு வாயையும் தலையும் சொல் நயத்தாற் போதருமென்க. தலைப்பற்றி வாய் கொள்ளுதல் -மேல் மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல். 2
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2
பறவை ஏறு, Paravai eru - பெரிய திருவடி மேல் ஏறுமவனான
பரம் புருடா, Param puruda - புருஷோத்தமனே!
நீ, Nee - (ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை, Ennai - (வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின், Kaikonda pin - ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும், Piravi ennum kadalum - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி, Vatri - வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது, Perum padham agindradhu - பெரிய தரம் பெற்றதாகிறது
இறவு செய்யும், Iravu seiyum - (இவ்வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு, Pavakkaadu - பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ, Thee koli - நெருப்புப் பட்டு
வேகின்றது, Vegindradhu - வெந்திட்டது
அறிவை என்னும், Arivai enum - ஞானமாகிற
அமுதம் ஆறு, Amudham aaru - அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது, Thalaipatri vaaikondadhu - மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது