Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 440 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
440பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணு வாரிடரைக் களைவானே ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தொறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம்பிரானே–5-1-8
காரணா,Kaaranaa - (உலகங்கட்குக்) காரணமானவனே!
என்ணுவார் இடரை களைவானே,Ennuvaar Idarai Kalaivaanae - (எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே!
மது சூதா,Madhu Soodhaa - மதுவைக் கொன்றவனே!
கரி கோள் விடுத்தானே,Kari Kol Viduththaanae - கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே!
கண்ணனே!,Kannaney - கண்ணனே!
வண்ணம்,Vannam - அழகிய
மால்,Maal - பெரிய
வரை,Varai - கோவர்த்தன மலை
குடை ஆக,Kudai Aaga - குடையாக (அமைய)
மாரி,Maari - மழையினின்றும்
காத்தவனே,Kaaththavanae - (பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே!
களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட,Atta - முடித்த
பிரானே,Piranae - உபகாரகனே!
ஏத்த அரு பெரு கீர்த்தியினானே,Eaetha Aru Peru Keerththiyinaanae - துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே!
எம்பிரானே,Empiraanae - எமக்குத் தலைவனே!
நான்,Naan - அடியேன்
உன்னை,Unnai - உன்னை
நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும்
நண்ணி,Nanni - ஆச்ரயித்து
ஏத்தும் நன்மை,Eaeththum Nanmai - துதிக்கையாகிற நன்மையை
அருள் செய்,Arul Sei - அருள் செய்ய வேணும்.