Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 415 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
415பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (நான்காம் பாட்டு ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் .) 4
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே –4-9-4
துவரை என்னும் அதில்,Thuvarai Ennum Adhil - ஸ்ரீத்வாரகை யென்கிற பட்டணத்தில்
பதினாறு ஆம் ஆயிரம் தேவிமார்,Pathinaaru Aam Aayiram Devimaar - (ஆயர் மங்கைகளாகிய) பதினாராயிரம் தேவிமார்
பணி செய்ய,Pani Seiyya - கைங்கரியம் பண்ண,
நாயகர் ஆகி,Naayagar Aagi - (அவர்களுக்கு) நாயகராய்க் கொண்டு
வீற்றிருந்த,Veetrirundha - (அவர்களின் நடுவே) எழுந்தருளியிருந்த
மணவாளர்,Manavaalar - மணவாளப்பிள்ளை
மன்னு,Mannu - (அழகியமணவாளப் பெருமாளாய்) நித்தியவாஸம் பண்ணுகிற
கோயில்,Koyil - கோயிலாவது;
புதுநாள் கமலம் மலர்,Pudunaal Kamalam Malar - அப்போதலர்ந்த செவ்விய தாமரை பூவானது
எம்பெருமான்,Emperumaan - எம்பெருமானுடைய
பொன் வயிற்றில்,Pon Vayitril - அழகிய திருநாபியிலுள்ள
பூபோல்வான்,Poopolvaan - தாமரைப்பூவோடு ஸாம்யம் பெறுவதற்காக
பொதுநாயகம் பாவித்து,Podhunaayagam Paaviththu - ஸர்வநிர்வாஹகத்தைப் பாவித்து
இறுமாந்து,Irumanthu - (அப்பாவனையாலே) கர்வங்கொண்டு
பொன் சாய்க்கும்,Pon Saikkum - (மற்ற தாமரைகளின்) அழகைத் தள்ளிவிடா நின்றுள்ள
புனல்,Punal - நீர்வளத்தையுடைய
அரங்கம்,Arangam - திருவரங்கமாம்.