Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 404 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
404பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 3
மரு மகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர்
திரு முகமாய்ச் செங்கமலம் திரு நிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே–4-8-3
மருமகன் தன்,Marumagan Than - மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை,Sandhathiyai - புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு,Uyir Meettu - மறுபடியும் உயிர் மீட்டு
மைத்துனன் மார்,Maiththunan Maar - மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு,Uru - சரீரமானது
மகத்து,Magaththu - (பாரதயத்தமாகிற) நரமேதத்திலே
வீழாமே,Veezhamae - விழுந்து அழிந்து போகாதபடி
குரு முகம் ஆய்,Guru Mugam Aay - ஆசார்ய ரூபியாய் (ஹித உபதேசங்களைப் பண்ணி)
காத்தான்,Kaaththaan - ரக்ஷித்தருளிய கண்ணபிரானுடைய
ஊர்,Oor - திருப்பதியாவது:
செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களானவை
திரு முகம் ஆய்,Thiru Mugam Aay - (பெரிய பெருமாளுடைய) திருமுகத்துக்குப் போலியாகவும்
கரு குவளை,Karu Kuvalai - நீலோத்பல புஷ்பங்கள்
திரு நிறம் ஆய்,Thiru Niram Aay - திருமேனி நிறத்துக்குப் போலியாகவும்
பொரு முகம் ஆய் நின்று,Poru Mugam Aay Nindru - (ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு
அலரும்,Alarum - நீர்வளத்தையுடைய
புனல்,Punal - நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது