Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3737 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3737திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமான் தம்மோடே கலந்து தம்வாயாலே திருவாய்மொழி கேட்டருளிந ப்ரீதி உள்ளடங்காமே ஆனந்தத்ததிற்குப் போக்கு வீடாகத் தென்னாதென்னாவென்று ஆளத்திவைத்துப் பாடிக் களியாநின்றான்! இஃது என்னபடியை மூன்றடிகளினால் அற்புதமாகப் பேசுகிறார்.) 5
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5
நண்ணா அசுரர்; நலிவு எய்த,Nannaa asurar; nalivu eydha - பிரதி கூலர்களான ஆஸூரப்ரக்தி;கள் அழியவும்
நல்ல அமரர்பொலிவு எய்த,Nalla amarar polivu eydha - அநுகூலர்களான தேவப்ரத்ருதிகள் மகிழவும்
எண்ணாதனகள் எண்ணும் நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப,Ennaadhanagal ennnum nalmunivar inbam thalai sirappa - எம்பெருமாளுக்கு இன்னமும் சில குண விபூதிகள் உண்டாகவேணுமென்று என்ணுமவர்களான முனிவர்கள் கேட்டு மிகவுமுகக்கும்படியாகவும்
பண் ஆர் பாடல் இன் கவிகள்,Pan aar paadal in kavikal - பண்ணிறைந்த பாடல்களான இனியகவிகளையிட்டு
யானாகி;த்தன்னைத் தானே பாடி,Yaan aagi; thannai thaane paadi - தானே யானாகி;த்தன்னைத் தானே பாடி
தென்னா என்னும் என் அம்மான்,Thenna ennum en ammaan - தென்னா தெனாவென்று ஆளத்திவைத்து ரஸியாநிற்கு மெம்பெருமான் (எங்குள்ளா னென்னில)
திருமாலிருஞ் சோலையான்,Thirumaalirunj solaiyaan - திருமாலிருஞ்சோலை மலையிலுள்ளான்.