Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 370 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
370பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 11
சீதநீர் புடை சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமை யின்றித் திரிவாரையும்
கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக் காளரே–4-4-11
சீதம் நீர்,Seetham Neer - குளிர்ந்த நீராலே
படை சூழ்,Padai Soozh - சுற்றும் சூழப் பெற்ற
செழு,Sezhu - செழுமை தங்கிய
கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடைய
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
ஆதியான்,Aadhiyaan - எம்பெருமானுக்கு
அடியாரையும்,Adiyaaraiyum - அடிமை செய்யும் பாகவதர்களையும்
அடிமை இன்றி,Adimai Inri - அடிமை செய்யாமல்
திரிவாரையும்,Thirivaaraiyum - திரிகின்ற பாவிகளையும் குறித்து,
கோதில்,Kothil - குற்றமற்றவரும்
பட்டர் பிரான்,Pattar Piraan - அந்தணர்கட்குத் தலைவரும்
குளிர,Kulira - குளிர்ந்த
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மண்,Man - நிர்வாஹருமான
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த இப் பாசுரங்களை
ஏதும் இன்றி,Eaathum Inri - பழுதில்லாதபடி
உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள்
இருடீகேசனுக்கு,Irudheekesanukku - எம்பெருமானுக்கு
ஆளர்,Aalar - ஆட் செய்யப் பெறுவர்