Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3628 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3628திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –தூ மொழி வாய் வண்டினங்காள்-என்னுடைய சுடர் வளையும் கலையும் இழந்தேன் என்று சொல்ல வேணும் – சொல்லும் இடத்தில் அவன் உங்கள் வார்த்தையை அநாதரியாமே பிராட்டி சந்நிதியில் வைத்துச் சொல்ல வேணும் -என்கிறாள்.) 6
தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6
தூ மொழி வாய்வண்டு இனங்காள்,Tu mozhi vayvandu inankal - தூய மொழியை வாயிலேயுடைய வண்டினங்களே
போது இரைத்து மது நுகரும் பொழில்,Podu iraithu madu nukarum pozhil - பூக்களிலே இரைத்துக்கொண்டு மதுபானம் பண்ணும் பொழில்களையுடைய
மூழிக்களத்து உறையும்,Moolikkalattu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்பவராய்
தம்மார்வகத்தே மாதரை வைத்தார்க்கு,Tamarvakatthe matarai vaitharkku - தமது திருமார்பிலே பிராட்டியைத்தாக்கி நிற்பவராய் பெரியவர்க்கு
என்வாய் மாற்றம்,En vay maatram - என் வாய்ப்பாசுரமான
தூது உரைத்தல் செப்புதீர் எல்,Tutu uraithal sepputhir el - தூது வாக்யத்தைச் சொல்லப் பார்த்தீர்களாகில்
சுடர் வளையும் கனையும்,Sudar valaiyum kanaiyum - (எனது) அழகிய கைவனைகளையும் சேலையையும் பற்றி
தூது உரைத்தல் செப்பு மின்கள்,Tutu uraithal seppu mingal - தூதுக்குப் பாசுரமாகச் சொல்லுங்கோள்