Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3410 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3410திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (கீழே ஏழு பாட்டுக்கள் கடந்தன. அவ்வேழு பாட்டுக்களிலும் ஏழு அவயவங்கள் நலிந்தன்மை சொல்லிற்று. அவையெல்லாம் திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் சேர்ந்து திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் பாட்டில்.) 8
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8
கோள் இழை தாமரையும்,Kol izhai thaamaraiyum - தன்னுடைய வொளியே தனக்கு ஆபரணமானகப் போரும்படியான தாமரையும் (திருக்கண்களும்)
கொடியும்,Kodiyum - கற்பகக் கொடியும் (திருமூக்கும்)
பவளமும்,Pavalamum - பவளமும் (திருவதரமும்)
வில்லும்,Villum - வில்லும் (திருப்புருவங்களும்)
கோள் இழைதண்முத்தமும்,Kol izhaidhan muththamum - தன்னுடைய தேஜஸஸையே தனக்கு ஆபரணமாகவுடைத்தும் (தந்தபங்க்தியும்)
தளிரும்,Thalirum - தளிரும் (திருக்காதும்)
குளிர் வான் பிறையும்,Kulir vaan piraiyum - குளிர்ந்து பெருத்த பிறையும் (நெற்றியும்) ஆகிய இவற்றோடே கூடி
கோள் இழையா உடைய,Kol izhaiya udaiya - தன்னழகே தனக்கு ஆபரணமாயிருக்கிற
கொழு சோதி வட்டம் கொல்,Kol sothi vattam kol - பூர்ணமான ஜ்யோதிர் மண்டலஸீஉலீ!
கண்ணன்,Kannan - கண்ணபிரானது
கோள் இழை வாள் முகம் ஆய்,Kol izhai vaal mukam aay - தன்னொளிதானே தனக்காபரணமான அழகிய முகமென்றொரு வியாஜத்தையிட்டு
கொடியேன் உயிர் கொள் கின்றது,Kodiyaen uyir kol kindradhu - கொடியேனான வென்னுடைய உயிரைக் கொள்ளை கொள்ளாநின்றது