Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3340 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3340திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பீரானே! உன் திருவடிகளைப் பெறுவதற்கு உபாயம் உன் திருவடிகளே யென்றிருக்கிற இந்த என்னுடைய அறிவுங்கூட அழியும் படி இந்திரியங்களைக் கொண்டு என்னைக் கலக்கி உன் திருவடிகளைச் சேராதபடி பண்ணவா நினைத்திருக்கிறாய் என்கிறார்.) 4
சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4
யாதும் யாவரும் இன்றி,Yaadhum yaavarum indri - சேதநாசேதநப் பொருள்களொன்றொழியாமல்
நின் அகம் பால் ஒடுக்கி,Nin agam paal oduki - உன் திருவயிற்றின் ஏக தேசத்திலே ஒதுங்கும் படி பண்ணி
ஓர் ஆலின் நீள் இலை மீது,Or aalin neel ilai meedhu - ஓர் ஆலமரத்தினுடைய சிறிய இலையின் மீது
சேர்குழவி,Ser kuzavi - குழந்தையாய்க் கண்வளர்ந்தருளினவனே!
வினையேன் வினை தீர் மருந்தே,Vinaiyen vinai theer marundhe - பாவியேனான வென்னுடைய பாவங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!
ஒர் ஐவரை காட்டி,Or aivarai kaatti - பஞ்சேந்திலீயங்களைக் காட்டி
நான் சூது அறியாவகை,Naan soodhu ariyaavakai - தான் உறுவது அறியாதபடி
சுழற்றி,Suzhatri - என்னை மருளப்பண்ணி
உன் அடி போது நான் அணுகா வகை செய்து,Un adi poadhu naan anugaa vakai seidhu - உன் திருவடி மலர்களை நான் கிட்டாதபடி பண்ணி
போதி கண்டாய்,Pothi kandai - கண்காணாதபடி கடக்க நிற்கின்றாயே!