Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 33 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
33பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 11
நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே-1-2-11
நாள்கள்,Naalgal - (கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள்
ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே,Ornaalu aindhu thingal alavile - ஒரு நாலைந்து மாதத்தளவிலே
தாளை நிமிர்ந்து,Thaalai nimirndhu - காலைத் தூக்கி
சகடத்தை,Sakataththai - சகடாஸுரனை
சாடிப்போய்,Saadippoy - உதைத்துவிட்டு,
வாள் கொள்,Vaal kol - ஒளிகொண்டதாய்
வளை,Valai - வளைந்திராநின்றுள்ள
எயிறு,Eyiru - கோரப்பற்களையுடைய பூதனையினது
ஆர் உயிர்,Aar uyir - அரிய உயிரை
வவ்வினான்,Vavvinan - முடித்த கண்ணனுடைய
தோள்கள் இருந்த ஆ காணீரே,Tholgal irundha aa kaanire - தோள்கள் இருந்த ஆ காணீர்!
சுரி குழலீர் வந்து காணீரே,Suri kuzhalir vandhu kaanire - சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்! வந்து காணீர்!!