Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3280 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3280திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (பராங்குசநாயகியின் ப்ராவண்ய மிகுதியைக் கண்டு ‘இவள் பிராட்டிமாரிலே ஒருத்தியர்!‘ என்று சங்கிக்கின்றமை கூறுகிறது) 10
பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம்
சென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.–6-5-10
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள்
பின்னைகொல்,Pinnai kol - நப்பின்னைப் பிராட்டியோ!
மா நிலம் மகள் கொல்,Maa nilam makal kol - பெருமைதங்கிய பூமிப்பிராட்டியோ!
திருமகள் கொலபிறந்திட்டாள்,Thirumagal kola pirandhittaal - (அல்லது) ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷமியே வந்து பிறந்தபடியோ!
என்ன மாயம் கொலோ,Enna maayam kolo - இது என்ன அதிசயமோ!
நெடுமால் என்றே நின்று கூவும்,Nedumaal endrae ninru koovum - ஸர்வேச்வரா! என்று நிலை நின்று ழைக்கின்றாள்,
அவன் முன்னிவந்து நின்று இருந்து உறையும்,Avan munni vandhu ninru irundhu uraiyum - அப்பெருமான் முற்பட்டு வந்து நிற்பது இருபதாய் நித்யவாஸம் பண்ணுமிடமான
துலைவில்லிமங்கலம,Tholaivillimangalam - துலைவில்லி திருப்பதியை
சென்னியால் வணங்கும்,Senniyaal vanangum - தலையாலே வணங்குகின்றாள்
அவ் ஊர் திரு நாமம் கேட்பதே சிந்தை,Av oor thiru naamam ketpathe sinthai - அத்திருப்பதியின் திரு காமத்தை (தன்வாயால் தான் சொல்வதிற் காட்டிலும்) பிறர் சொல்லக் கேட்க வேணுமென்பதே இவளது சிந்தனை.