Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3236 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3236திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில வண்டுகளைக் குறித்துக் கூறுகின்றாள். “எமது தலைவர் பெண் பிறந்தார் காரியமெல்லாம் செய்து தலைக் கட்டி விட்டோமென்றிரப்பர், அப்படி யன்றிக்கே, ரக்ஷ்ய வர்க்கத்திலே நானு மொருத்தி யிருக்கின்றதாகச் சொல்லுங்கோள்“ என்கிறாள்.) 10
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10
வெறி வண்டு இனங்காள்,Veri Vandu Inangkaal - பரிமளம் மிக்க வண்டினங்களே!
உம்மை வேறு கொண்டு,Ummai Veru Kondu - உங்களிடத்திலே விலக்ஷணப்ரதிபத்தி பண்ணி
யான் இரந்தேன்,Yaan Iranthen - அடியேன் ஒன்று
தேறு நீர் பம்பை வடபால் திருவண்வண்டூர்,Theru Neer Pambai Vadapaal Thiru Vanvandur - தெளிந்தநீரையுடைய பம்பையாற்றின் வடபக்கத்திலுள்ள தான திருவண்வண்டுரிலே (எழுந்தருளியிருக்கின்ற)
மாறு இல் போர் அரக்கன்,Maaru Il Por Arakkan - நிகரற்ற யுத்தம் செய்வதில்வல்லவனான இராவணனுடைய
மதிள்,Mathil - மதிள்முதலிய யாவும்
நீறு எழ,Neeru Ezha - பொடிபொடியாம்படி
செற்று,Settru - இலங்கையையழித்து (அதனால்)
உகந்த,Ugandha - திருவுள்ளமுவந்த
எறு சேவகனார்க்கு,Eru Sevakanaarkku - மஹாவீரனான ஸ்ரீராமபிரானிடத்திலே
என்னையும் உள்ள் என்மின்கள்,Ennaiyum Ull Enminkal - ரக்ஷ்யவர்த்திலே நானுமொருத்தி இருப்பதாகச் சொல்லுங்கோள்.