Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3229 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3229திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (பக்ஷிகள் கூட்டங்கூட்டமாக உலாவுவது வழக்கம். அங்ஙனே கூட்டமாக அவை இருப்பது தன் காரியம் செய்த்தற்காகவேயென்று பராங்குச நாயகியின் கருத்துப்போலும். அவை செய்களூடு உழல்வது தங்கட்கு இரை தேடுகைக்காகவாகி வாகக் கருதி, பறவைகளா! செய்களூடு எதற்காக உழல்கின்றிர்கள்? எனக்காக நீங்கள் தேடும் எம்பெருமான் திருவண்வண்டூரிலன்றோ உறைகின்றான் என்கிறாள்.) 3
திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3
திறங்கள் ஆகி,Thirangal Aagi - திரள்திரளாக
எங்கும்,Engum - பார்த்தவிடமெல்லாம்
செய்களூடு,Seygaloodu - விளைநிலங்களிலே
உழல்,Uzhal - உலாவுகின்ற
புள் இனங்காள்,Pul Inangkaal - பறவைக் கூட்டங்களே!
சிறந்த செல்வம் மல்கு,Sirandha Selvam Malku - உயர்ந்த ஐச்வரியம் விஞ்சியிருக்கிற
திருவண்வணடூர்,Thiruvanvandur - திருவண்வண்டூரிலே
உறையும்,Uraiyum - நித்யவாஸம் பண்ணுமவனும்
கறங்கு சக்கரம் கை,Karangu Chakkaram Kai - சுழன்று வருகிற திருவாழியைக் கையிலேயுடையவனும்
கனி வாய்,Kani Vaai - கனிபோன்ற அதரத்தையுடையவனுமான
பெருமானை கண்டு,Perumaanai Kandu - எம்பெருமானை ஸேவித்து
நீர்,Neer - நீங்கள்
இறங்கி தொழுது,Irangi Thozhudhu - தாழ்ந்து தொழுது
அடியேன் இடர்,Adiyen Idar - அடியேன் படுகிற கஷ்டத்தை
பணியீர்,Paniyeer - சொல்லுங்கள்.