Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3218 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3218திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உன்னுடைய பால சேஷ்டிதங்களானவை என் நெஞ்சை உருகப் பண்ணா நின்றன என்கிறார்.) 3
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3
பெய்யும் பூ குழல் பேய் முலை உண்ட,Peyyum poo kuzhal pey mulai unda - பூக்களையுடைய கூந்தலையுடையளான பூதனையின் முலையைச் சுவைத்துண்ட
பிள்ளை தேற்றமும்,Pillai thetrum - இளமைத் தெளிவும்
ஓர் சாடு போந்து இற,Or saadu poandhu ira - (அஸுரா வேகங்கொண்ட) ஒரு சாரும் பேர்ந்து முறிந்து போம்படி
செய்ய பாதம் ஒன்றால் செய்த,Seyya paadam ondraal seytha - சிவந்த திருவடியொன்றோடு செய்தருளின
நீன் இது சேவகமும்,Neen idhu sevakamum - உன்னுடைய இளவீரமும்
நெய் உண் வார்தையும்,Ney un vaarthaiyum - நெய்யை உண்ட விஷயம் ப்ரஸ்தாவத்திற்கு வந்த வளவிலே
அன்னை, கோல் கொள்ள,Annai, kol kolla - தாயானவள் கையிலே கோலை யெடுத்துக்கொள்ள
நீ,Nee - எல்லாரையும் நியமிக்கப்பிறந்த நீ
உன் தாமரை கண்கள் நீர் மல்க,Un thaamarai kangal neer malg - உனது தாமரைபோன்ற திருக்கண்கள் நீர் நிறம்பும்படி
பையவே நிலையும்,Paiyave nilaiyum - அஞ்சி நடுங்கிநிற்கும் நிலையும்
வந்து,Vandhu - இப்போதும் என்னெஞ்சிலே வந்து தோன்றி
என் நெஞ்சை உருக்குங்கள்,En nenjai urugungal - எனது உள்ளத்தை உருக்குகின்றன