| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3180 | திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ பன்னீராயிரப்படி -அநந்தரம் குரூரமான கர்ம பிரகாரங்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னும் என்கிறாள்.) 9 | கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும் கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ? கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்? கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9 | கொடிய வினை யாதும் இலன் என்னும்,Kodiya vinai yaadhum ilan ennum - (இப்பெண்பிள்ளை) கொடிய கருமங்களின் பற்று சிறிது முடையேனல்லேன் நான் என்கிறாள்; கொடிய வினை ஆவேனும் யானே என்னும்,Kodiya vinai aavenum yaane ennum - அக்கொடியகருமங்களும் எனது நிக்ரஹங்களும் என்கிறாள்; கொடிய வினை செய்வேனும் யானே என்னும்,Kodiya vinai seivenum yaane ennum - ஆச்ரிதவிரோதிகளுக்குக் கொடியபாவங்களை விளைப்பதும் நானே என்கிறாள்; கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்,Kodiya vinai theerpenum yaane ennum - (அடியார்கட்குக்) கொடிய பாவங்களைத் தீர்த்துக் கொடுப்பதும் நானே யென்கிறாள்; கொடியான் இலங்கை செற்றேனே என்னும்,Kodiyan ilangai settraenae ennum - கொடியவனான இராவணனுடைய இலங்காபுரியைத் தொலைத்த்தும் நானே யென்கிறாள்; கொடிய புள் உடையவன் ஏற கொலோ,Kodiya pul udaiyavan eerakolo - (இவன் இப்படிச் சொல்லுவது) ஆச்ரித விரோதிகளுக்குக் கொடியவனான பெரிய திருவடியை த்வஜமாகவுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ? கொடியேன் கொடி என் மகள் கோலங்கள் இவை,Kodiyaan kodi en magal kolangal ivai - கொடியேனான என்னுடைய கொடி போன்ற இம்மகளின் அழகிய சேஷ்டைகளான இவற்றைப் பற்றி கொடிய உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,Kodiya ulagaththirkku en sollugean - சொல்லு சொல்லென்று ஹிம்ஸிக்கிற உங்களுக்கு என்னவென்று சொல்லுவேன்?. |