Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3175 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3175திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –க்ரியாதிகள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள்.) 4
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இள மான் திறத்தே.–5-6-4
செய்கின்ற திதி எல்லாம் யானே என்னும்,Seikinra thithi ellaam yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) நிகழ்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;
செய்வான் நின்றனகளும் யானே என்னும்,Seivaan nindranagalum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) எதிர்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;
செய்து முன் இறந்தவும் வானே என்னும்,Seidhu mun iranthavum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) இறந்தகாலச் செய்கைகளெல்லாமும் யானே யென்கிறாள்;
செய்கை பயன் உண்பேனும் யானே என்னும்,Seikai payan unbenum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) செய்கைகளின் பலன் களையனுபவிப்பதும் யானே யென்கிறாள்;
செய்வார்களை செய்வேனும் யானே என்னும்,Seivarkalai seivenum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) செய்கைகளைச் செய்கின்ற கர்த்தாக்களைப் படைப்பதும் யானே யெனன்கிறாள்; (இவள் இப்படி யெல்லாம் சொல்லுவது)
செய்ய கமலம் கண்ணன் ஏற கொலோ,Seiya kamalam kannan eerakolo - செந்தாமரைக் கண்ணனான எம்பெருமான் ஆவேசித்ததனாலோ?
செய்ய கனி வாய் இன மான் திறந்து,Seiya kani vaai in maan thirandhu - சிவந்தாணிபோன்ற அதரத்தையுடையவளாய் இளமான் போன்றவளான இவள் விஷயத்தில்
செய்ய உலகத்தீர்க்கு,Seiya ulagaththirkku - (இப்பெண்பிள்ளையானவள்) கபடமறியாத உங்களுக்கு இவை என் சொல்லுகேன்?