| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3105 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத் திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன் திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11 | திரு அடியை,Thiru adiyai - ஸர்வாமியாய் காரணனை,Kaarananai - நாராயணானாய் கேசவனை,Kaeshavanai - பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை திரு அடி சேர்வது கருதி,Thiru adi saervadhu karuthi - கிட்டியநுபவிக்க விரும்பி செழு குருகூர் சடகோபன்;,Sezhu kurukoor sadagopan - செழு குருகூர் சடகோபன்; திரு அடி மேல்,Thiru adi mel - அவனது திருவடிகளின் மீது உரைத்த,Uraitha - அருளிச்செய்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;,Thamil aayiraththul ippattum - தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்; திரு அடியே,Thiru adiye - அந்தத் திருவடிகளையே அடைவிக்கும்,Adaivikkum - அடையப்பண்ணும்; திரு அடி சேர்ந்து,Thiru adi serndhu - (ஆதலால், நீங்கள்) அந்தத் திருவடிகளைக் கிட்டி ஒன்றுமின்,Ondrumin - பொருந்தியிருக்கப் பாருங்கள் |