| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3103 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக் கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.) 9 | கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து, ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்; வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9 | அரவு அணையாய்,Aravu anaiyaay - சேஷசாயியான பெருமானே!, நீ,Nee - நீ நின் குரை கழல்கள்,Nin kurai kazhalkal - (அபிமதரான சிலரை) ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே கூட்டுதி,Kootuthi - சேர்த்துக் கொள்ளுகிறாய்; இமையோரும்,Imayorum - (திருவுள்ள மில்லையாகில்) (ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும் தொழா வகை செய்து,Thoza vakai seydhu - கண்டு அநுபவியாதபடி பண்ணி ஆட்டுதி,Aattuthi - அலைக்கின்றாய்; அஃது,Ahdhu - இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை அடியேனும்,Adiyenum - நானும் அறிவன்,Arivan - அறிந்தேயிருக்கின்றேன்; என்னை,Ennai - எனக்குண்டான வேட்கை எல்லாம் விடுத்து,Vedkai ellaam viduthu - விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து உன் திரு அடியே,Un thiru ade - உனது திருவடிகளையே சுமந்து உழல,Sumanthu uzhal - நான் தலையால் சுமந்து திரியும்படி கூட்ட அரிய திரு அடிக்கண்,Kootu ariya thiru adikkan - துர்லபமான திருவடிகளிலே கூட்டினை,Koottinai - சேர்த்துக் கொண்டாய்; நான் கண்டேன்,Naan kandeen - இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன் |