Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3100 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3100திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (பரமஹிம்ஸையே போதுபோக்கான இந்த லோக யாத்ரையை நான் காணாதபடி என்னை யழைத்துக் கொண்டருளவேணுமென்கிறார். ஆழ்வார் திருப்புளியாழ்வாரடியிலே திருக்கண்களை மூடிக்கொண்டு எழுந்தருளியிரா நிற்கச் செய்தேயும் லோக யாத்ரை யுள்ளது உள்ளபடி யுணர்ந்து பேசுகிறது என்னே! என்று வியக்க வேண்டும் படியிராநின்றது.) 6
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6
மறுக்கி,Marukki - பயமூட்டி
வல் வலைபடுத்தி,Val valaipaduthi - தங்களது கொடிய வலையிலே சிக்கிக்கொள்ளும்படி செய்து
குமைத்திட்டு கொன்று,Kumaittu konru - சித்ரவதம் பண்ணி
உண்பர்,Unpar - தங்கள் வயிற்றை வளர்ப்பர்கள்;
அறம் பொருளை அறிந்து ஓரார்,Aram porulai arindhu orar - தருமதத்துவத்தை யறிந்து கவனிப்பாரில்லை; (இவை என்ன உலகு இயற்கை!)
வெறி துவளம் முடியானே,Veri thuvulam mudiyane - பரிமளம்மிக்க திருத்துழாயைத் திருமுடியிலணிந்துள்ளவனே ((இப்படிப்பட்ட ஒப்பனையழகைக்காட்டி)
வினையேனை,Vinaiyene - பாவியான என்னை
உனக்கு அற,Unakku ara - உன் விஷயத்திலேயே அற்றுத் தீரும்படி
அடிமை கொண்டாய்,Adimai kondai - ஏற்கனவே அடிமைகொண்டிருப்பவனே!
என் ஆர் அமுதே,En ar amudhe - எனக்கு பரிபூர்ணமான அமுதமே!
இனி,Ini - உடனே
கூய் அருளாய்,Kuy arulaye - அழைத்துக் கொண்டருள வேணும்.