Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3094 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3094திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (இருள் தருமாஞாலத்தில் பிறப்பையறுத்துப் பரமபதம் பெறுதற்கு இத்திருவாய்மொழி ஸாதனமாயிருக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11
உயிரினால் குறைவு இல்லா,Uyirinaal kuraivu ella - எண்ணிறந்த ஆத்மாக்களையுடைய
ஏழ் உலகு,Ezh ulagu - ஸமந்த லோகங்களையும்
தன்னுள்; ஒடுக்கி,Thannul; odugi - தன்னுடைய ஸங்கல்பத்திலே யடக்கிவைத்து
தயிர் வெண்ணெய் உண்டானை,Thayir vennai undaanai - தயிரும் வெண்ணெயும் அமுது செய்தவனான எம்பெருமான் விஷயமாக
தடம் குருகூர் சடகோபன்,Tadam kurugoor sadagopan; - தடம் குருகூர் சடகோபன்;
செயிர் இல்,Seir il - குற்றமற்ற
இசை,Isai - இசையோடு கூடின
சொல்மாலை,Solmaalai - சொல்மாலையாகிய
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாட்டினுள்ளே
இபத்தால்,Ipaththaal - இந்தப்பதிகத்தினால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து,Vairam saer pirappu aruthu - உரமேறின ஸம்ஸாரத்தை அடியறுத்து
வைகுந்தம்,Vaigundham - பரமபதத்தை
நண்ணுவர்,Nannuvar - கிட்டப்பெறுவர்.