Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 305 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
305பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண்ணுறங்காதே யிருந்து கடையவும் தான் வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளை
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ–3-8-9
என் மகள் தான்,En Magal Thaan - என் மகளானவள்
வெளிவரைப் பின் முன் எழுந்து,Velivarai Pin Mun Ezhandhu - கிழக்கு வெளுப்பதற்கு முன்பாக எழுந்திருந்து
கண் உறங்காதே இருந்து,Kan Urangaadhe Irundhu - கண் விழித்துக்கொண்டிருந்து
வெள் நிறம் தோய் தயிர் தன்னை,Vel Niram Thoy Thayir Thannai - வெளுத்தை நிறுத்தையுடைத்தாய் தோய்ந்த தயிரை
கடையவும் வல்லன் கொல் ஓ,Kadaiyavum Vallan Kol O - கடையும் படியான சக்தியைத் தான் உடையவனோ?
ஒண் நிறம் செம் தாமரை கண்,On Niram Sem Thamarai Kan - அழகிய நிறத்தையுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனும்
உலகு அளந்தான்,Ulagu Alandhaan - (திரிலிக்ரமாவதாரத்தில்) உலகளந்தருளினவனுமான கண்ணபிரான்
என் மகளை,En Magalai - என் பெண்ணை
பண் அறையாய் கொண்டு,Pan Arayai Kondu - தர்ம ஹாநியாக இழி தொழில்களைச் செய்வித்துக் கொண்டு
பரிசு அற,Parisu Ara - (அவளுடைய) பெருமை குலையும்படி
ஆண்டிடும் கொல் ஓ,Aandidum Kol O - ஆளுவனோ?