Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3006 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3006திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (நித்யாஸித்த கல்யாண்குண பூஷிதனான எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த ஆயிரத்தில் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கட்கு உபயவிபூதி ஸாம்ராஜ்யமும் குறையற உண்டாம்படி எம்பெருமான் அநுக்ரஹம் செய்தருள்வன் என்றாறாயிற்று.) 11
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11
கேடு இல்,Kedu il - ஒருநாளுமழில்லாத
விழு புகழ்,Vizhu pugazh - சிறந்த புகழையுடையனான
கேசவனை,Kesavanai - எம்பெருமான் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்,Paadal or aayirathul - ஓராயிரம் பாசுரங்களினுள்ளே
இவையும் ஒரு பத்தும்,Ivaiyum oru paththum - இப்பதிகத்தை
பயிற்றவல்லார்கட்கு,Payittravallaarkadku - ஓதவல்லவர்களுக்கு
அவன்,Avan - அந்த எம்பெருமான்
நாடும் நகரமும்,Naadum nagaramum - சிறியார் பெரியாரென்கிறவாசியின்றிக்கே அனைவரும்
நன்குடன் காண,Nankudan kaana - நன்றாகக் காணும்படி
நலன் இடை ஊர்தி பண்ணி,Nalan idai oorthi panni - பகவத் பாகவத் விஷயத்தில் அடிமைச் செல்வத்தோடே நடக்கும்படி பண்ணி
வீடும் பெறுக்கி,Veedum perukki - மோக்ஷானந்தத்தையும் அடைவித்து
தன் மூவுலக்கும்,Than moovulakkum - தன்னுடையதான மூவுலகங்கட்கும்
ஒரு நாயகம்,Oru naayagam - ஏகாதிபதியாயிருக்கும் சிறப்பையும்
தரும்,Tharum - தந்தருள்வன்