Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2997 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2997திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (இந்நிலத்தில் வந்து திருவவதாரம் பண்ணுதற்கு அடியாகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளிப் பிறகு வஸுதேவர் திருமகனாய் வந்து பிறந்தருளி ஆச்ரித விரோதிகளைத் தொலைந்தருளின கண்ணபிரானுடைய கீர்த்தியைப் பலபடியும் அநுபவிக்கப்பெற்ற நான் மேன்மேலும் இங்ஙனம் அநுபவிப்பதில் யாதொருதடையுமுடையேனல்லேனென்கிறார்.) 2
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2
குறைவு இல் தட கடல்,Kuraivu il thada kadal - குறையற்ற (பரிபூர்ணமான) விசாலமான திருப்பாற் கடலிலே
கோள் அரவு ஏறி,Kol aravu eri - மிடுக்கனான திருவனந்தாழ்வான் மீது ஏறி
தன்,Than - தன்னுடைய
கோலம்,Kolam - அழகிய
செம் தாமரை கண்,Sem thaamarai kan - செந்தாமரை போன்ற திருக்கண்கள்
உறைபவன் போல,Uraipavan pola - துயிலப் பெற்றவன் போல
ஓர் யோகு புணர்ந்த,Or yogu punarntha - யோக நித்திரை செய்தருள்கின்ற
ஒளி மணிவண்ணன்,Oli manivannan - அழகிய நீலமணி போன்ற நிறத்தனும்
கண்ணன்,Kannan - கண்ணனாய்த் திருவவதரித்தவனும்
கறை அணி மூக்கு உடை,Karai ani mookku udai - கறையை அணிந்த மூக்குடையவனான
புள்ளை,Pullai - பக்ஷி ராஜனை
கடாவி,Kadaavi - நடத்தி
அசுரரை காய்ந்த,Asurarai kaaintha - அசுரர்களை முடித்தவனுமான
அம்மான்,Ammaan - எம்பெருமானுடைய
நிறை புகழ்,Nirai pugazh - நிறைந்த புகழை
யான்,Yaan - நான்
ஏத்தியும்,yethiyum - துதித்தும்
பாடியும்,Paadiyum - இசையில் அமைத்துப் பாடியும்
ஆடியும்,Aadiyum - கூத்தாடியும்
ஒரு முட்டு இலன்,Oru muttu ilan - (எம்பெருமானை யநுபவிப்பதில் ) ஒரு தடையுமுடையேனல்லேன்.