திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2927 | திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (திருமலையொன்றே நம் வினை ஓய்வதற்குப் போதுமென்கிறார் கீழ்; அந்தத் திருமலை தானும் பூர்த்தியாகவேணுமென்பதில்லை, அதில் ஏகதேசமே போதுமென்கிறாரிப்பாட்டில். (இங்க ஏகதேசமென்கிற வார்த்தையினால் நினைக்கிறது திருமலையப்பனை. திருமலையில் ஸம்பந்தத்தைப் பற்றியாயிற்று ஸ்ரீநிவாஸனும் உத்தேச்யனாவது திருமங்கையாழ்வார் “வட மா மலை யுச்சியை” என்ற ஸ்ரீநிவாஸனைத் திருமலையின் ஏக தேசமாகவே கூறினார்.) 9 | ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9 | பதவுரை Show / Hideதிருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன பிறப்பு , Pirappu - பிறவியென்ன இறப்பு , Irappu - மரணமென்ன அடி , Adi - திருவடிகளை வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும் மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும் வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை) வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை செய்வான் , Seyvaan - செய்தருள்வன். |