திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2927 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2927திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (திருமலையொன்றே நம் வினை ஓய்வதற்குப் போதுமென்கிறார் கீழ்; அந்தத் திருமலை தானும் பூர்த்தியாகவேணுமென்பதில்லை, அதில் ஏகதேசமே போதுமென்கிறாரிப்பாட்டில். (இங்க ஏகதேசமென்கிற வார்த்தையினால் நினைக்கிறது திருமலையப்பனை. திருமலையில் ஸம்பந்தத்தைப் பற்றியாயிற்று ஸ்ரீநிவாஸனும் உத்தேச்யனாவது திருமங்கையாழ்வார் “வட மா மலை யுச்சியை” என்ற ஸ்ரீநிவாஸனைத் திருமலையின் ஏக தேசமாகவே கூறினார்.) 9
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள்மலராம் அடித் தாமரை வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9
பதவுரை Show / Hide
திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற
ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன
பிறப்பு , Pirappu - பிறவியென்ன
இறப்பு , Irappu - மரணமென்ன
அடி , Adi - திருவடிகளை
வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும்
மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும்
வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு
பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை)
வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை
செய்வான் , Seyvaan - செய்தருள்வன்.