Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2867 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2867திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (அற்பமான விஷய ஸூகங்களைவிட்டு, அற்புத இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புறபேண்டி யிருப்பீர்! எம்பெருமானுடைய திருக்குணங்களிலே இடைவிடாது அவகாஹித்துப் போருங்கோள், என்கிறார்) 4
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4
புலன் ஐந்து,Pulan Aindhu - சப்தாதி விஷயங்கள் ஐந்திலும்
மேயும்,Meyum - மேய்கின்ற
பொறி ஐந்தும்,Pori aindhum - பஞ்சேந்திரியங்களின் வசத்தில் நின்றும்
நீங்கி,Neengi - விலகி
நலம் அந்தம் இல்லர் ஓர்நாடு புகுவீர்,Nalam andham illar oornadu puguveer - ஆனந்தம் அளவிறந்திருப்பதான திருநாட்டிலே போய்ப்புக வேண்டியிருப்பவர்களே!
அசுரரை,Asurarai - அசுரர்களை
அலமந்து வீய செற்றான்,Alamandhu veeya setraan - குடல் குழம்பிச் சாகும்படி கொன்ற பெருமானுடைய
பலம் முந்து சீரில்,Palam mundhu seeril - பலனே முந்தியிருக்கின்ற திருக்குணங்களில்
ஓவாதே,Ovaadhe - அநவரதம்
படிமின்,Padimin - அவகாஹியுங்கள்.