Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2849 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2849திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (ஆழ்வாரே! என்னை நீர்வளைத்துப் பேசுவது கிடக்கட்டும் நீர் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி என்னைவிட்டகன்று போய்விடுவீரோ என்று நான் கவலை கொண்டிராநிற்கையில், நீர்இங்ஙனே பேசக்கடவீரோ? நான் உம்மைவிட்டு எங்கும் போகப்போகிறதில்லை; நீர்என்னை விட்டுப் போகாதிருப்பீரா? சொல்லும், என்று எம்பெருமான் திருவுள்ளமாக, முக்காலத்திலும் எல்லாப்படியாலும் எனக்கு உபகாரம் செய்தருளின உன்னைப் பெற்றுவைத்து, இனிநான் அகன்று போவதற்கு என்ன ப்ரஸக்தி உண்டு, என்று உறுதியாகக் கூறி முடிக்கின்றார்.) 10
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10
போகின்ற காலங்கள்,Pogindra Kaalangal - நிகழ் காலங்கள்
போய காலங்கள்,Poya Kaalangal - இறந்த காலங்கள்
போகு காலங்கள்,Pogu Kaalangal - எதிர்காலங்கள் (ஆகிய இவற்றில்)
தாய் தந்தை உயிர்ஆகின்றாய்,Thai Thandhai Uyir Aagindraai - தாயும் தந்தையும் உயிருமாயிருப்பவனே!
பாகின்ற,Paagindra - பாவுகின்ற
தொல் புகழ்,Thol Pugazh - நித்யமான கீர்த்தியையுடையனாய்
மூ உலகுக்கும் நாதனே!,Moo Ulakukkum Naadane! - மூன்று லோகங்களுக்கும் நாதனாயிருப்பவனே!
பரமா,Paramaa - ஸர்வோத்க்ருஷ்டனே!
தண் வேங்கடம் மேகின்றாய்,Than Thiruvengadam Megindrai - குளிர்ந்த திருவேய்கடமலையை விரும்பி இருப்பவனே!
தண் விரை நாறு,Than Virai Naaru - குளிர்ந்த பரிமளம் வீசப்பெற்ற
துழாய் கண்னியனே,Thuzhai Kanniyanne - திருத்துழாய் மாலையை யுடையவனே!
உன்னை நான்,Unnai Naan - அடைந்தேன் விடுவேனோ?