Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2816 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2816திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் “அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! பாரிபூர்ணமான பேறுபெற்று விட்டீரன்றோ? இனியொரு குறையில்லையே; இனியுமக்கு நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லையே’ என்ன அதற்கு ஆழ்வார், ‘பெருமானே! இவ்விபூதியில் தான் இப்போது ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கிறேனென்பதில் ஸந்தேஹமில்லை; ஆனாலும் வி‘யாந்தரங்களின் நடுவே என்னை வைத்திருக்கின்றாயாதலால் இவ்வானந்தம் இங்கே நித்தியமாய்ச் செல்லாதாகையாலே ஒரு அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்று அங்கு அடியார்களின் கோஷ்டியிலே அந்வயிக்க வேண்டிய தொன்றுண்டு அது எப்போது ப்ராப்தமாகுமோ? என்கிறார்.) 10
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10
களிப்பும்,Kalipum - அல்ப ஸந்தோஷமும்
கவர்வும்,Kavarvum - மனக் கவலையும்
அற்று,Attru - ஒழிந்து
பிறப்பு,Pirappu - ஜன்மமும்
பிணி,Pini - வியாதிகளும்
மூப்பு,Moopu - கிழத் தனமும்
இறப்பு,Irappu - மரணமும்
அற்று,Attru - ஒழிந்து
ஒளிக் கொண்ட சோதியம் ஆய்,Olik kondta sodiyam aay - ஞானம் முதலிய ஒளிகளுக்கு ஒளியைத் தருவதாய் தான ஒளி யுருவை யுடையோமாய்.
துளிக்கின்ற,Thulikkindra - மழை பொழிகின்ற
வான்,Vaan - ஆகாசத்தையும்
இ நிலம்,I nilam - இந்தப் பூமியையும்
சுடர்,Sudar - ஒளி மிக்க
ஆழி சங்கு,Aazhi sanggu - திருவாழி திருச்சங்குகளை
ஏந்தி,Yendhi - தாங்கி
அளிக்கின்ற,Alikkindra - ரஷித்தருள்கின்ற
மாயன் பிரான்,Maayan piran - ஆச்சர்ய சேஷ்டிதனான பரம புருஷனுடைய
அடியார்கள்,Adiyaargal - பக்தர்களினுடைய
குழாங்களை,Kulangalai - கூட்டங்களை
உடன் கூடுவது,Udan kooduvadhu - சேர்த்து அநுபவிக்கப் பெறுவது
என்று கொல்,Endru kol - என்றைக்கோ?