Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2805 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2805திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே என்கிறார்.) 10
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10
வெள் ஏறன்,Vel yeran - வெளுத்த எருதை வாஹனமாகவுடைய சிவபிரானும்
நான்முகன்,Naanmugan - பிரமனும்
இந்திரன்,Indiran - இந்திரனும்
வானவர்,Vaanavar - மற்றுமுள்ள தேவர்களும (ஒன்று கூடி)
கள்வா,Kalva - “கள்வனே!
எம்மையும்,Emmayum - எங்களையும்
ஏழ் உலகும்,Ezhu ulagum - ஏழுலகங்களையும்
நின் உள்ளே,Nin ulle - உனது ஸங்கல்பத்தினுள்ளே
தோற்றிய,Thotriya - தோன்றுவித்த
இறைவ,Iraiva - ஸ்வாமியே!”
என்று,Enru - என்று சொல்லி
புள் ஊர்தி,Pul oorthi - கருட வாஹனனாகிய ஸர்வேச்வரனுடைய
கழல்,Kalzal - திருவடிகளை
பணிந்து,Paninthu - வணங்கி
ஏத்தவர்,yetthavar - துதிப்பர்