திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2783 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2783திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (வருந்தியாகிலும் அவன் பக்கலில் நின்றும் நெஞ்சை மீட்டு அவனை மறந்திருத்தாலோ வென்ன, தன்னை நான் மறவாமைக்காகத் தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து எனக்கு மிகவுமெளியனாய்க் கொண்டு ‘இனிப்பேரேன்’ என்றிருத்தருளினானாதலால் அவனை நான் மறக்க விரகில்லையே யென்கிறார்கிறார்.) 10
மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன் மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10
பதவுரை Show / Hide
மறப்பும் ஞானமும் ஒன்று,marappum gnaanamum onru - மறத்தலும் அறிதலுமாகிய ஒன்றையும்
நான் உணர்த்திலன்,naan unarthilan - நான் அறியேன்;
மறக்கும் என்று,marakkum endru - (இப்படி யிருக்க) இவன் நம்மை மறந்து விடுவன் என்று நினைத்து
செந்தாமரை கண்ணோடு,senthaamarai kannodu - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களோடு
மறப்பு அற,marappu ara - மறப்புக்கு அவகாசமில்லாதபடி
என் உள்ளே,en ullam - எனது நெஞ்சினுள்ளே
மண்ணினான் தன்னை,manninaan thannai - நிலை பெற்றிருந்தவனான
என் மணியை,en maniyai - எனது நீலரத்னமாகின எம் பெருமானை
இனி யான் மறப்பேனா,ini yaan marappeena - இனி நான் மறப்பேனோ? (ஒருநாளும் மறவேன்)