Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2740 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2740திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் மீண்டும் இந்த ஸம்ஸாரநிலத்தில் வந்து பிறக்கப் பெறார்களென்று பயன்சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11
மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
மாதவன் பால்,Madhavan Paal - லக்ஷ்மீ நாதனான எம்பெருமான் பக்கலில் (பக்தி யுக்தராய்)
தீது அவம் இன்றி உரைத்த,Theethu Avam Indri Uraiththa - தனது மேன்மையைப் பார்த்து உதாஸீநனாயிருத்தல் அடியாருடைய குற்றங்களைப் பார்த்துக் கைவிட்டொழிதல் ஆகிய இருவகைக் குற்றமும் எம்பெருமானுக்கு இல்லை யென்பதை யெடுத்துரைத்த
ஏதம் இல் ஆயிரத்து,Yetham el Aayirathu - வழுவற்ற இத் திருவாய் மொழியாயிரத்தில்
இ பத்து,E Pattu - இப் பத்துப் பாசுரஙக்ளையும்
ஓத வல்லார்,Otha Vallar - (குருமுகமாக) அதிகரிக்க வல்லவர்கள்
பிறவார்,Piravaar - மீண்டும் பிறந்து வருந்த மாட்டார்கள்