Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2677 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2677திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (கல்யாண குணமுடைமையையும் நித்ய விபூதி யாட்சியையும் திவ்ய மங்கள் விக்ரஹ முடைமையையும் முதற் பாட்டிலே அநுஸந்தித்து, அவற்றிக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தின் வைலக்ஷண்யத்தை இரண்டாம் பாட்டிலே அருளிச் செய்து, அவற்றோடே சேர்த்து ஒரு கோர்வையாக அநுபவிக்கத் தக்கதான லீலா விபூதி யுடைமையை இப் பாட்டிலே அருளிச் செய்கிறார்.) 3
இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3
அது இலன் (என), Adhu ilan (Ena) - அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும்
இது உடையன் என, Idhu udaiyan ena - இந்தப் பொருளை யுடையவன் என்றும்
நினைவு அரியவன், Ninaivu ariyavan - நினைப்பதற்கு அருமைப் பட்டவனாகியும்
நிலன் இடை, Nilan idai - பூமி முதலான (கீழ்) உலகங்களிலும்
விசும்பிடை, Visumbidai - ஆகாசம் முதலான (மேல்) உலகங்களிலும் (உள்ள)
உருவினன், Uruvinan - ரூபியான அசேநப் பொருள்களை யுடையவனாகியும்
அருவினன், Aruvinan - ரூபியல்லாத சேதனர்களை யுடையவனாகியும்
புலனொடு, Pulanodu - விஷயமாகிற பொருள்களோடு (கலந்து நின்றாலும்)
புலன் அலன், Pulan alan - (தான்) புலன்களுக்கு விஷயமாகாதவனாகியும்
ஒழிவு இலன் பரந்த, Ozhivu ilan parandha - எபபொழுதும் எங்கம் வியாபித்திருக்கிற
அ நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே, A nalan udai oruvanai nanuginam naame - முன் சொன்ன கல்யாண குணங்களை யுடைய ஒப்பற்ற எம்பெருமானை நாம் கிட்டப் பெற்றோம்.