Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 261 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
261பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
சிந்துரப் பொடிக் கொண்டு சென்னி யப்பித் திரு நாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தாலணிந்து
இந்திரன் போல் வரு மாயப் பிள்ளை எதிர் நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே–3-4-8
சிந்துரம் பொடி கொண்டு,Sindhuram Podi Kondu - ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து
தன்,Than - தன்னுடைய
சென்னி,Senni - திரு முடியிலே
சிப்பி,Sippi - அப்பிக் கொண்டும்
அங்கு,Angu - திரு நெற்றியில்
ஓர் இலை தன்னால்,Or Ilai Thannal - ஒரு இலையினாலே
திரு நாமம் இட்டு,Thiru Naamam Ittu - ஊர்த்துவ புண்ட்ரம் சாத்திக் கொண்டும்
நெறி,Neri - நெறித்திரா நின்றுள்ள
பங்கியை,Pangiyai - திருக் குழலை
அழகிய,Azhagiya - அழகிய
நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களினால்
அந்தரம் இன்றி அணிந்து,Antharam Inri Anindhu - இடைவெளியில்லாதபடி (நெருங்க) அலங்கரித்துக் கொண்டும்
இந்திரன் போல்,Endhiran Pol - ஸாக்ஷாத் தேவேந்திரன் போல
வரும்,Varum - (ஊர்வலம்) வருகின்ற
ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுக்கு
எதிர் அங்கு,Ethir Angu - எதிர்முகமான இடத்தில்
நின்று,Nindru - நின்று கொண்டு
வளை இனம்,Valai Inam - கை வளைகளை
இழவேல்,Ezhavael - நீ இழக்க வேண்டா”
என்ன,Enna - என்று (என் மகளை நோக்கி நான் உறுத்திச்) சொல்லச் செய்தேயும்
நங்கை,Nangai - (எனது) மகளானவள்
சந்தியில் நின்று,Sandhiyil Nindru - அவன் வரும் வழியில் நின்று
தன் துகிலொடு,Than Thugilodu - தனது துகிலும்
சரிவளை,Sarivalai - கைவளைகளும்
கழல்கின்றது,Kalalkindrathu - கழன்றொழியப் பெற்றாள்.
ஏ,Ae - இதென்ன அநியாயம்!