Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 259 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
259பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
சிந்துர மிலங்கத் தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தர முழவத் தண் தழைக் காவின் கீழ் வருமாயரோடு உடன் வளை கோல் வீச
அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப் பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ–3-4-6
தோழீ,Thozhi - வாராய் தோழீ!
தன்,Than - தன்னுடைய
திருநெற்றி மேல்,Thirunettri Mel - திரு நெற்றியில்
சிந்துரம்,Sindhuram - சிந்தூரமும்
திருத்திய,Thiruthhiya - (அதன் மேல்) ப்ரகாசமாகச் சாத்தின
கோறம்பும்,Korambum - திலகப் பொட்டும்
திரு குழலும்,Thiru Kuzhalum - (அதுக்குப் பரபாகமான) திருக் குழற் கற்றையும்
இலங்க,Elanga - விளங்கவும்
அந்தரம்,Antharam - ஆகாசமடங்கலும்
முழவம்,Muzhavam - மத்தளங்களின் ஓசையினால் நிறையவும்
தழை,Thazhai - பீலிக் குடைகளாகிற
தண்,Than - குளிர்ந்த
காவின் கீழ்,Kaavin Keezh - சோலையின் கீழே
வரும்,Varum - (தன்னோடு) வருகின்ற
ஆயரோடு உடன்,Aayarodu Udan - இடைப் பிள்ளைகளோடு கூட
வளை கோல் வீச,Valai Kol Veesa - வளைந்த தடிகளை வீசிக் கொண்டு
ஒன்றும் அந்தம் இல்லாத,Ondrum Antham Illadha - (அலங்கார விசேஷங்களில்) ஒவ்வொன்றே எல்லை காண ஒண்ணாத
ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரான்
அறிந்து அறிந்து,Arindhu Arindhu - தன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்து வைத்தும்
இ வீதி,E Veedhi - இத் தெரு வழியே
போதும் ஆகில்,Podhum Aagil - வருவானாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து,Panthu Kondaan Endru Valaithu Vaithu - (அவனை) ‘ (எங்கள்) பந்தை வலியப் பிடுங்கிக் கொண்டு போனவனன்றோ இவன்’ என்று (முறையிட்டு) வழி மடக்கி
பவளம் வாய்,Pavalam Vaai - (அவனுடைய) பவளம் போன்ற அதரத்தையும்
முறுவலும்,Muruvallum - புன் சிரிப்பையும்
காண்போம்,Kaanbom - நாம் கண்டு அநுபவிப்போம்.