Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2582 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2582திருவாசிரியம் || 5
மா முதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி,
மண்முழுதும் அகப்படுத்து,
ஒண்சுடர் அடிப்போது ஒன்றுவிண் செலீஇ,
நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப,
வானவர் முறைமுறை வழிபட நெறீஇ,
தாமரைக் காடு மலர்க் கண்ணோடு கனிவாயுடையதுமாய்
இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?
மா முதல் அடி போது ஒன்று, Maa Mudhal Adi Podhu Ondru - (உலகத்துக்கெல்லாம்) மூலாதாரமாகிய திருவடிகளில் ஒன்றை
கவிழ்ந்து அலர்த்தி, Kavizhndhu Alartthi - நில மட்டமாகப் பரப்பி
மண் முழுவதும், Man Muzhuvadhum - பூமியை யெல்லாம்
அகப் படுத்து, Agap Paduthu - திருவடிக்குள்ளடக்கி ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
ஒண் சுடர் அடி போது ஒன்று, Onn Sudar Adi Podhu Ondru - அழகிய தேஜஸ்ஸு நிறைந்த மற்றொரு திருவடித் தாமரையை
நான் முகன் புத்தேள் நாடு, Naan Mughan Puththael Naadu - பிரம தேவனுடைய உலகமானது
வியந்து உவப்ப, Viyandhu Uvappa - ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடையும் படியாகவும்
வானவர், Vaanavar - மற்றுமுள்ள தேவர்கள்
முறை முறை, Murai Murai - சாஸ்திர விதிப்படி
வழி பட, Vazhi Pada - ஆராதிக்கும்படி யாகவும்
விண்செலீஇ நிறீஇ, Vincheli I Nir I - ஆகாசத்திலே செலுத்தி நிறுத்தி
தாமரைக் காடு மலர் கண்ணொடு, Thaamarai K Kaadu Malar Kannodu - தாமரைக் காடு மலர்ந்தாற் போலிருக்கிற திருக் கண்களையும்
கனி வாய் உடையதும் ஆய், Kani Vaai Udaiyadhum Aayi - கொவ்வைக் கனி போன்ற திரு அதரத்தையும் உடையவனாயும்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன, Iru Naayiru Aayiram Malarndhanna - பெரிய ஆயிரம் ஸூர்யர்கள் சேர்ந்து உதித்தாற் போன்ற
முடி, Mudi - திரு வபிஷேகத்தை யுடையனாயும்
பல பல கற்பகம் காவு அன்ன, Pala Pala Karppagam Kaavu Anna - பல வகைப் பட்ட கற்பகர் சோலைகள் போலே
தோற் ஆயிரம் தழைத்த, Thoor Aayiram Thazhaiththa - ஆயிரம் திருத் தோள்களை பணைத்திருக்கப் பெற்றவனாயுமுள்ள
நெடி யோய்க்கு அல்லதும், Nedi Yoykku Alladhum - பரம புருஷனான உனக்குத் தவிர (வேறு யார்க்கேனும்)
உலகு அடியதோ, Ulaku Adiyatho - இவ் வுலகம் அடிமைப் படக் கூடியதோ?