Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2515 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2515திருவிருத்தம் || 38
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே
கடன் ஆயினகள் கழித்து, Kadan Aayinagal Kazhiththu - காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு, Kadham Aayin Pukku - தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால், Tham Kaal Vanmaiyaal - தமது கால்களின் வலிமையால்
பல நாள், Pala Naal - அனேக காலம்
நீர் நிலை நின்ற, Neer Nilai Nindra - நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல், Thavam Ithu Kol - இத் தவத்தினாலேயோ
நீலங்கள், Neelangal - நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி, Kudam Aadi - (கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும், I Mannum - இந்த மண்ணுவகமும்
விண்ணும், Vinnum - விண்ணுலகமும்
குலுங்க, Kulunga - நெகிழும்படி
உலகு, Ulaku - உலகங்களை
அளந்து, Alandhu - அளவிட்டு
நடம் ஆடிய, Nadam Aadiya - (இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான், Perumaan - எம்பெருமானுடைய
உரு ஒத்தன, Uru Oththana - திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.