Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2514 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2514திருவிருத்தம் || 37
கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே
அரு வினையேன், Aru Vinaiyen - அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும், Nedu Kaalamum - வெகு காலம்
கண்ணன், Kannan - கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம், Neel Malai Paatham - நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி, Paravi - வழிபட்டு
பெற்ற, Petra - அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான், Thodungaal Osiyum Idai Inamaan - தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற, Sendra - நடந்துபோன
சூழ்கடம், Sozhkadham - பரந்த பாலைநிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர், Kodu Kaal Silaiyar - வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர், Nirai Kaal Uzavar - பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய, Kolaiyil Veyya - கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால், Sudu Kaal - நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர், Ilaignar - இளைவீரர்களது
துடி, Thudi - பறைகள்
படும், Padum - ஒலித்தலாகிற
கவ்வைத்து, Kavvaiththu - ஆரவாரமுடையது.