Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2513 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2513திருவிருத்தம் || 36
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
துழா நெடு சூழ் இருள் என்று, Thuzha Nedhu Soozh Irul Endru - (கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேடவேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த, Ezha Nedhu Oozhi Ezuntha - (முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும், Ikkaalaththum - இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ, Eengu Ivalo - இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ, Tham Than Thaar Adhu Peyar Aa - நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக (துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக்கொண்டு)
வழா நெடு துன்பந் தன், Vazha Nedhu Thunban Than - தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று, Endru - என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார், Irangaar - (தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ, Ammanoo - அந்தோ!
இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ள
குழாம், Kuzhaam - கூட்டமான
நெடுமாடம், Nedumaadam - பெரிய மாளிகைகளை
இடித்த, Iditha - (தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார், Piranar - தலைவருடைய
கொடுமைகளே, Kodumaikaale - கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.