Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2494 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2494திருவிருத்தம் || முன்பு ஸ்ரீ ராமபிரான் வனவாசம் யாத்ரை புறப்பட்ட பொழுது உடன் சென்ற அயோத்யா நகர ஜனங்கள் அறியாத படி தேர் ஏறிச் சென்றால் போல் இங்கு மறைத்துப் போகாமல் போன வழி தெரியும் படி போனதே இவ்விடத்துக்கு வாசி – 17
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே
இருள விரி, Irula Viri - இருளை வெளியுமிழ்கிற
நீலம், Neelam - நீலரத்தினம் போன்ற
கரு, Karuv - கருமை நிறமுடைய
ஞாயிறு, Nyaayiru - ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல், Sudar Kaalvathu Pol - ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள், Irul Viri Sothi Porul - கருமை நிறம்
அரவணைமேல், Aravanaimeel - சேஷ சயனத்தின்மேல்
உறையும், Urayum - நித்யவாஸம் செய்யப்பெற்ற
எறி கடலே, Eri Kadaley - அலை வீசுகிற கடலே!
வாழி, Vaazhi - வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன, Irul Virindhaal Anna - இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு, Maa Neer Thirai Konda - கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல், Irul Pirindhaar Anbar Ther Vazhithooral - இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற நாயகருடைய தேர் போன வழியை அழியா தொழிவையாக