Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2481 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2481திருவிருத்தம் || அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சம் -பிராமண பூர்வகமாக எம்பெருமான்  பின் சென்று தளர்ந்து இருக்கும் பொழுது- தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது -என்று அத்தையே ஸ்திரப்படுத்தி அருளி குளிர்ந்த காற்றும் அவன் திருத் துழாய் -சம்பந்தம் கொண்டு நலியும் படியை சொல்லி – பாக்ய பதார்த்தங்கள் இனி தம்மை ஹிம்சிப்பதை வெளியிட்டு அருளுகிறார் 4
தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே
தனி நெஞ்சம், Thani Nenjam - (என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன், Mun - முன்னமே
அவர் புள்ளே, Avar Pulle - அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது, Kavarnthathu - (பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று. (ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு, Than Am Thuzhaikku - (அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது, Kavarnthathu - கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம், Nenjam - வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம், Ini Ingu Yaam Ilam - இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர், (அப்படியிருக்க.)
முனி, Muni - கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி, Vanjam Paeychchi - வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை, Mulai - (விஷந்தடவின) முலையை
சுவைத்தான், Suvaiththan - (பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய், Mudichoodum Thuzhai - திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே, Pani Nanjam Maruthame - குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே, Nee Nadhuvae - நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு, Emmathu Aavi Panippu - (ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே, Iyalthae - (உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)