Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2479 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2479திருவிருத்தம் || தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் – நாயகிக்கு உண்டான வை லக்ஷண்யத்தைத் தோழியானவள் கண்டு ஆச்சர்யப்பட்டு பேசுகிறாள் எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்வாருக்கு உண்டான அன்பு மிகுதியால் கண் கலக்கத்தைக் கண்டு பகவத் விஷயத்திலே இப்படியும் ஒரு அபி நிவேசம் உண்டாவதே என்று வியப்புற்ற பாகவதர்கள் வார்த்தை 2
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன், Muzhu Neer Mukil Vannan Kannan - நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே, Moodhuvar Aam Vinnattavar Thozhneer Inai Adikke - (யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய, Anbu Soottiya - தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு, Sool Kuzharku - அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து, Sezhuneer Thadathu - மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல், Kayal - கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப, Milirndhaal Oppa - பிறழ்ந்தாற் போல
சே அரி கண், Sae Ari Kann - சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப, Azhuneer Thulumb - (நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன, Alamarugirathin - தடுமாறுகின்றன;
வாழி, Vaazhi - இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)