| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 221 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 9 | வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்–2-10-9 | வானத்து,Vaanaththu - (கடலில் நீரை முகந்து கொண்டு) ஆகாசத்திலே எழுந்து,Ezhandhu - கிளம்பின மழை முகில் போல்,Mazhai Mugil Pol - வர்ஷிக்கப் புக்க மேகம் போல ஏனத்து உரு ஆய்,Eenaththu Uru Aai - (கறுத்த நிறத்தை யுடைய) ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து) கானத்து,Kaanaththu - காடு நிலங்களில் எங்கும்,Engum - எல்லாவிடத்திலும் (திரிந்து) மேய்ந்து,Meindhu - (கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து களித்து,Kaliththu - செருக்கடைந்து விளையாடி,Vilaiyaadi - விளையாடி, இடந்த,Edandha - (பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த இம் மண்ணினை,Em Manninai - இந்தப் பூமியை தானத்தே,Thaanaththae - யதாஸ்தாநத்தில் வைத்தானால்,Vaiththaanal - (கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; தரணி,Dharani - (இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை இடந்தானால்,Edandhaan - கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |