| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 220 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 8 | தாழை தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய் வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்–2-10-8 | தாழை,Thaazhai - (கரையிலே) தாழைகளையும் தண் ஆம்பல்,Than Aambal - (உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய தடம் பெரும்,Thadam Perum - மிகவும் பெரிய பொய்கை வாய்,Poigai Vaai - தடாகத்தினுள்ளே வாழும்,Vaazhum - வாழ்ந்து கொண்டிருந்த முதலை,Mudhalai - முதலையின் வாயாகிய வலைப்பட்டு,Valaipattu - வலையிலே அகப்பட்டுக் கொண்டு வாதிப்பு உண்,Vaadippu Un - துன்பமடைந்த வேழம்,Vezham - ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயர்,Thuyar - வருத்தம் கெட,Keda - தீரும்படியாக விண்ணோர் பெருமான் ஆய்,Vinnor Perumaan Aai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய் ஆழி,Aazhi - (அப்பொய்கைக் கரையிலே சென்று) சக்ராயுதத்தாலே பணி கொண்டானால்,Pani Kondaanal - (முதலையைத் துணிந்து , கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அதற்கு,Adharku - அந்த யானையின் திறத்தில் அருள் செய்தானால்,Arul Seidhaan - (இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |