| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 219 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 7 | மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த இம் மண்ணினை ஓரடி யிட்டு இரண் டாமடி தன்னிலே தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7 | மாவலி,Maavali - மஹாபலியினுடைய வேள்வியில்,Velviyil - யாக பூமியிலே மாண் உரு ஆய் சென்று,Maan Uru Aai Sendru - பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி மூ அடி தா என்று,Moo Adi Thaa Endru - (என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று இரந்து,Erandhu - யாசித்துப் பெற்ற இம் மண்ணினை,Em Manninai - இந்தப்பூமியை ஓர் அடி இட்டு,Or Adi Ittu - (அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே) (பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து) இரண்டாம் அடி தன்னிலே,Erandam Adi Thannilae - இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே தாலி அடி இட்டானால்,Thaali Adi Ittaanal - மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால் இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; தரணி அளந்தானால்,Dharani Alandhaanal - (தேவேந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி) லோகத்தை அளந்தவனாலே இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |