| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2181 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக – இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில் பெறுவதும் அவனையே பெறுகைக்கு சாதனமும் அவனே என்று – அத்யவசித்துப் போவாய் – என்கிறார் – 100 | ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும், ஈரடியும் காணலா மென்னெஞ்சே. – ஓரடியில் தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர், மாயவனை யேமனத்து வை. | என் நெஞ்சே, En Nenje - எனது மனமே! ஓர் அடியின், Oru Adiyin - (தனது) ஒப்பற்ற அடிவைப்பினாலே தாயவனை, Thaayavani - லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும் கேசவனை, Keesavani - கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும் தண் துழாய்மாலை சேர், Than Thuzhaimalaik Seer - குளிர்ந்த திருத்துழாய் மலையோடு சேர்ந்தவனுமான மாயவனையே, Maayavanaiye - எம்பெருமானையே மனத்து வை, Manaththu Vai - மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதிகொண்டால்) ஓர் அடியும், Oor Adiyum - உலகங்களையெல்லாம் அளந்துகொண்ட ஒரு திருவடியும் சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும், Saadu Uthaitha Onmalai Seadiyum - சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய ஈர் அடியும் காணலாம், Eer Adiyum Kaanalam - இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப்பெறலாங்கான் |