Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 218 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
218பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 6
தள்ளித் தளிர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளை யுற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்–2-10-6
தள்ளி தளர்நடை இட்டு,Thalli Thalarnadai Ittu - (காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே) தட்டித் தடுமாறி தளர்நடை யிட்டு
இளம் பிள்ளையாய்,Iam Pillaiyaai - (நடக்க வேண்டும்படியான) இளங்குழந்தையாய்
கள்ளத்தினால்,Kallaththinal - (இருக்கச் செய்தே) (தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த,Vandha - (தன்னைக் கொல்ல) வந்த
பேய்ச்சி அவளை,Peychi Avalai - பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உற நோக்கி,Ullaththin Ullae Ura Nokki - (’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து
முலை,Mulai - (பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே) அம் முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்,Uyir Thulla Suvaiththadhaal - (அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
துவக்கு அற,Thuvakku Ara - (அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்,Undaanaal - (அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;